﻿சங்கீ..
93.
கர்த்தர் அரசர். அவர் மகத்துவத்தையும் வல்லமையையும் ஆடையைப்போல் அணிந்திருக்கிறார். அவர் ஆயத்தமாயிருப்பதால் உலகம் பாதுகாப்பாய் உள்ளது, அது அசைக்கப்படுவதில்லை. 
தேவனே, உமது அரசு என்றென்றும் தொடருகிறது. தேவனே, நீர் என்றென்றைக்கும் வாழ்கிறீர்! 
கர்த்தாவே, ஆறுகளின் ஒலி மிகுந்த இரைச்சலுடையது. மோதும் அலைகள் இரைச்சலெழுப்புகின்றன. 
கடலின் மோதும் அலைகள் ஒலிமிகுந்து வல்லமை மிகுந்தவையாக உள்ளன. ஆனால் மேலேயுள்ள கர்த்தர் இன்னும் மிகுந்த வல்லமையுள்ளவர். 
கர்த்தாவே, உமது சட்டங்கள் என்றென்றும் தொடரும். உமது பரிசுத்த ஆலயம் வெகு காலம் நிலைநிற்கும். 
